சண்டமாருதம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ' முடிவற்ற சாலை' தொடரில் காந்தியெனும் நெருப்பு என்கிற தலைப்பில் காந்தியின் சமாதி குறித்தக் கட்டுரை வாசித்தேன். ராஜ்கோட்டிலுள்ள காந்தி சமாதி குறித்து பேசும் அவர் , காந்தியின் குரல் குறித்தும் எழுதியிருந்தார். அவரது உரைகள் இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன. அவரது குரல் மென்மையானது. சண்டமாருதம் போல மேடையில் அவர் பேசவில்லை. ஒரு தந்தை மகனிடம் பேசுவதைப்போல, ஒரு தாய் பிள்ளைகளிடம் பேசுவது போல பேசுகிறார்....
அது என்ன சண்டமாருதம் ?
தமிழின் முதல் சிறுகதை என சொல்லக்கூடிய குளத்தங்கரை அரசமரம் ( வ.வே.சு ஐயர் ) கதையில் ஓரிடம் 'ஆகாயத்தில் சந்திரன்,நட்சத்திரங்கள் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் அந்தகாரம். பூமியெங்கும் கிடுகிடு என்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்க, காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக்கொண்டிருந்தது'.
சேலம் வேலுச்சாமி கவிராயர் ' சண்டமாருதம் ' என்கிற பெயரில் ஒரு இதழ் நடத்தியிருக்கிறார். அதே பெயரில் மற்றொரு பத்திரிகை துவக்கப்பட்டச் செய்தியை 04.01.1931 தேதியிட்ட குடிஅரசு இதழ் அ.பொன்னம்பலனார் துவங்கும் சண்டமாருதம் வார பத்திரிகை என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. இதே பெயரில் சுயமரியாதைக்காரர்களுக்கான தினசரி இதழ் என்கிற அடைமொழியுடன் சொ.முருகப்பா ஒரு இதழ் துவங்கியிருக்கிறார். இந்த இதழில்தான் தேசிக விநாயகம் பிள்ளையின் முதல் கவிதை வெளியானதாக ஒரு குறிப்பு இருக்கிறது. 1940 களில் திரை ஒளி என்கிற பத்திரிகை திரைத்துறை சார்ந்த செய்தியைப் பேசுவதற்கென்று துவக்கப்பட்டது. இதற்கு போட்டியாக மாடர்ன் தியேட்டர்சார் சண்டமாருதம் என்கிற பெயரில் ஒரு பத்திரிகை துவங்க , அதன் ஆசிரியராக கண்ணதாசன் பொறுப்பேற்றிருக்கிறார். ஆக , சண்டமாருதம் என்கிற சொல் பத்திரிகைத்துறையில் அதிகம் புழங்கிய பெயராக இருந்திருக்கிறது என்பது உண்மை.
புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை 'பயம்'. ஒரு நள்ளிரவில் ஒரு கிழவர் ஒருவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார். ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வருகையில் கொலை செய்யப்பட்டவன் வருகிறானென துப்பாக்கி எடுத்து சுடும் மனப் பிராந்திக்கு ஆட்பட்டவனின் கதை இது. ' கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்து உறங்குகிறது. அதற்கு இந்தப் பயம் தெரியுமா?' வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சட சடா' என்று ஒரு இடி முழக்கம்...
இதலிருந்து சண்டமாருதம் என்பது வானிலையுடன் தொடர்புடைய சொல் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
இச்சொல் குறித்துத் தேடுகையில் சண்டம் + மாருதம் எனப் பிரித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சண்டம் என்பது கொடுமை அல்லது விரைவு என்றும் மாருதம் என்பது காற்று அல்லது வாயு எனவும் பொருள் கொள்ள வேண்டும். இதிலிருந்து பார்க்கையில் சண்டமாருதம் என்பது சூறாவளி, பெருங்காற்று எனலாம். நாம் ஊழிக்காற்று எனப் பொருள் கொள்வோமே...
அது என்ன சண்டமாருதம் ?
தமிழின் முதல் சிறுகதை என சொல்லக்கூடிய குளத்தங்கரை அரசமரம் ( வ.வே.சு ஐயர் ) கதையில் ஓரிடம் 'ஆகாயத்தில் சந்திரன்,நட்சத்திரங்கள் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் அந்தகாரம். பூமியெங்கும் கிடுகிடு என்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்க, காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக்கொண்டிருந்தது'.
சேலம் வேலுச்சாமி கவிராயர் ' சண்டமாருதம் ' என்கிற பெயரில் ஒரு இதழ் நடத்தியிருக்கிறார். அதே பெயரில் மற்றொரு பத்திரிகை துவக்கப்பட்டச் செய்தியை 04.01.1931 தேதியிட்ட குடிஅரசு இதழ் அ.பொன்னம்பலனார் துவங்கும் சண்டமாருதம் வார பத்திரிகை என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. இதே பெயரில் சுயமரியாதைக்காரர்களுக்கான தினசரி இதழ் என்கிற அடைமொழியுடன் சொ.முருகப்பா ஒரு இதழ் துவங்கியிருக்கிறார். இந்த இதழில்தான் தேசிக விநாயகம் பிள்ளையின் முதல் கவிதை வெளியானதாக ஒரு குறிப்பு இருக்கிறது. 1940 களில் திரை ஒளி என்கிற பத்திரிகை திரைத்துறை சார்ந்த செய்தியைப் பேசுவதற்கென்று துவக்கப்பட்டது. இதற்கு போட்டியாக மாடர்ன் தியேட்டர்சார் சண்டமாருதம் என்கிற பெயரில் ஒரு பத்திரிகை துவங்க , அதன் ஆசிரியராக கண்ணதாசன் பொறுப்பேற்றிருக்கிறார். ஆக , சண்டமாருதம் என்கிற சொல் பத்திரிகைத்துறையில் அதிகம் புழங்கிய பெயராக இருந்திருக்கிறது என்பது உண்மை.
புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை 'பயம்'. ஒரு நள்ளிரவில் ஒரு கிழவர் ஒருவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார். ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வருகையில் கொலை செய்யப்பட்டவன் வருகிறானென துப்பாக்கி எடுத்து சுடும் மனப் பிராந்திக்கு ஆட்பட்டவனின் கதை இது. ' கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்து உறங்குகிறது. அதற்கு இந்தப் பயம் தெரியுமா?' வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சட சடா' என்று ஒரு இடி முழக்கம்...
இதலிருந்து சண்டமாருதம் என்பது வானிலையுடன் தொடர்புடைய சொல் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
இச்சொல் குறித்துத் தேடுகையில் சண்டம் + மாருதம் எனப் பிரித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சண்டம் என்பது கொடுமை அல்லது விரைவு என்றும் மாருதம் என்பது காற்று அல்லது வாயு எனவும் பொருள் கொள்ள வேண்டும். இதிலிருந்து பார்க்கையில் சண்டமாருதம் என்பது சூறாவளி, பெருங்காற்று எனலாம். நாம் ஊழிக்காற்று எனப் பொருள் கொள்வோமே...
கருத்துகள்
கருத்துரையிடுக