தாம்பு
மும்பை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,' உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம்தான்' என்றார். இவ்வுரைக்கு புலவர் பா.வீரமணி வண்ணக்கதிரில் 'பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால்படி' என்கிற தலைப்பில் மறுப்புக் கட்டுரை எழுதினார். இராஜாராம் மோகன்ராய் உருது, அரபு, பாரசீகம், ஆங்கிலம் தெரிந்த பன்மொழி அறிஞர். பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருத்தவம், வேதம், உபநிடதங்கள் அறிந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியினர் சமஸ்கிருதம் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்டமிட்டபோது கவர்னர் ஜெனரல் ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு 11.12.1823 அன்று நீண்ட கடிதம் எழுதினார். 'சமஸ்கிருதம் இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடைக்கச் செய்கிறது. இதுவே பிரிட்டிஷ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்குமானால் சமஸ்கிருதக் கல்வி முறை போதுமானதாகும்'. (ஆதாரம் - இராஜாராம் மோகன்ராய் - சௌமியேந்திரநாத் தாகூர் - 1972 - சாகித்திய அகாதமி ). ' வடமொழி நம்மை தூக்கிடும் தாம்பு - நம் உரிமைதனைக் கடித்தது அப்பாம்பு ' எ...