தமிழி
'தடம் பதிக்கும் தமிழி எழுத்துக்கள் ' தினமணி புத்தாண்டு மலர் -2020 இல் வெளியான ஒரு கட்டுரை. தமிழி என்பது என்ன? கரூர் பரணிபார்க் பள்ளியின் முதன்மை முதல்வரும் , திருக்குறள் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சொ.ராமசுப்ரமணியன் , தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி, வட்டெழுத்து, தமிழ் என்று அழைக்கிறோம் என்கிறார்.தமிழி எழுத்தில் உச்சரிப்பு அனைத்தும் தமிழில் வரும் உயிர், மெய் எழுத்துக்களின் ஓசைதான். ஆனால் எழுத்துக்களின் வடிவம் மட்டும்தான் மாறுபட்டவை. குகைக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்றும் வேறு சிலர் தமிழ் - பிராமி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1. தமிழ்–பிராமி, 2. அசோகன்-பிராமி, 3. வடஇந்திய-பிராமி, 4.தென்னிந்திய-பிராமி, 5.சிங்கள–பிராமி. இங்கு, பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். உலகில் ...