இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புல் - பெரிதினும் பெரிதுகாண்

படம்
தமிழறிஞரும் முதுமுனைவருமான இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர், நூலாசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தமிழுக்காக தான் வாழ்ந்த பெருவாழ்வை, அவராற்றிய அளப்பெரியத் தொண்டினை ‘ ஒரு புல் ’ என்கிற தலைப்பில் தன் வரலாற்றாக்கம் செய்திருக்கிறார் இரா.இளங்குமரன். ஓர் அறிஞரின் பெருவாழ்வு எங்ஙனம் ஒரு புல் என்றாகும்...?        மகாகவி பாரதி பார்வையில் புல் என்பது சின்னஞ்சிறிய , அற்பமான ஓருயிரி . ' காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் ; என்றன் காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன் ' . என மரணத் தூதுவன் காலனை ‘புல்’ என்கிறார் மகாகவி பாரதி.                 புல்லுருவி , என்றொரு சொல் தமிழில் உண்டு. இடையூறன் , தீயவன் , கயவன் , தீங்கன் , பதறன் ,... இவர்களைக் குறித்துக் காட்டும் உருவகச் சொல் இது. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்கிற சிறுகதையில், புதுமைப்பித்தன் ‘ கல்லுருவி புல்லுருவி’ என்கிற சொற்றொடரைப்...