இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பகம்

படம்
ஆந்திர மாநிலம், சித்தூர் ( தனித்தொகுதி) மக்களவைத் தொகுதியிலிருந்து கடந்த 2009 ஆண்டு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத், ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 -14 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதையெடுத்து ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவபெருமான், அம்பேத்கர், நாரதர், கலைஞர், எம்.ஜி.ஆர், அகத்தியர்,  ஹிட்லர், நாதஸ்வர வாசிப்பாளர்,..என தினமும் விதவிதமான கதாபாத்திர வடிவில் ஆடை அலங்காரம் செய்து விநோதமாக போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். செப்-21, 2019 அன்று அவர் மறைந்ததையடுத்து பதினெட்டு கதாபாத்திரங்கள் கொண்ட கோப்புப் படத்துடன் கூடிய இரங்கல் செய்தியை இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'நவராத்திரி' என்கிற திரைப்படத்தில், அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் நடித்துள்ளார். நவம் என்றால் ஒன...

குழாம்

படம்
எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம் - இந்து தமிழ் திசை இதழில் செல்வேந்திரன் எழுதிய ஒரு  கட்டுரை. திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்சோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் யோஜனா, ஸ்மார்ட் சிட்டி , பொருளாதார நெருக்கடி,..என எந்தவொரு கேள்விக்கும் கல்லூரி மாணவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சினிமா பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறார்கள்,...இன்றைய கல்லூரி மாணவர்கள் குறித்து கவலைப்படும் கட்டுரையாளர் மொக்கை என்கிற சொல்லுக்கு கூர்மையற்ற, மொக்கு, மொண்ணை என்பதாகப் பொருள் தந்திருந்தார்.  குழாம் என்பது என்ன? இலங்கை தமிழர்களிடம் இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. '20 -20 மட்டைப்பந்து போட்டிக்கு இலங்கை குழாம் அறிவிப்பு -  வீரகேசரி'. இங்கு குழாம் என்பது அணி. விண்மீன் குழாம் ( விண்மீன் கூட்டம் ) சென்னையில் இயங்கிவரும் ஓர் இலக்கிய அமைப்பு ' சென்னை மரபுக்கூடல்'. இந்த அமைப்பு மரபு இல்லம், ஆற்றுப்படை, செம்மை நல அரங்கு, செம்மை நூலகம், நூல் விற்பனை, பொது அ...

ஈறு

படம்
Assam NRC | No last word yet on National Register of Citizens: Himanta Biswa Sarma. ( THE HINDU).அஸ்ஸாம் மாநிலத்தில் வசிப்பவர்களில் உண்மையான குடிமகன் யார், வெளிநாட்டினர் யார் என்கிற கணக்கெடுப்பு உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் நடந்தேறியது. மொத்தமுள்ள 3 கோடி பேரில் 19 இலட்சம் பேர் வெளிநாட்டினர் என்கிற பட்டியல் வெளியானது. இப்பட்டியலிருந்தவர்களில் பலர் தாங்கள் அஸ்ஸாமியினரே எனக் கதறவும் எங்களை உண்மையான இந்திய அஸ்ஸாமி பட்டியலில் சேர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்கள். இந்நிலையில் அம்மாநில அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா (பாஜக), 'மோடி மற்றும் அமித்ஸா இருவரும் இந்துக்களை கைவிடமாட்டார்கள். கவலை கொள்ள வேண்டாம். இப்பட்டியல் ஒன்றும் கடைசிச் சொல் அல்ல' என்றார். இறப்பதற்கு முன் சொல்வதும், ஒரு சம்பவம் முடிவுறும் பொருட்டு மொழிதலும் கடைசிச் சொல் என அழைக்கலாகின்றன. காந்திஜி உச்சரித்த கடைசிச் சொல் - ஹேராம். ஜூலியஸ் சீசர் - புரூட்டஸ்? ; காமராசர் - விளக்கை 'அணை'. திருக்குறளின் கடைசிச் சொல் - பெறின். லிப்கோ ஆங்கில அகராதி - Zymurgy/ஆக்ஸ்போர்டு அகராதி - Zucchini/லியோ தமிழ் அகராத...

வாலறிவன்

படம்
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இதை வென்றவர் தமிழ்நாட்டு வீராங்கனை என்பதால், 'இளவேனில் வளரிவான் அசத்தல்', 'இளவேனில் வலரிவான் தங்கம் வென்றார்' என்கிற செய்தி தொலைக்காட்சியில் வரிச்செய்தியாகவும், முதன்மைச் செய்தியாகவும் இடம் பெற்றது. வளரிவான், வலரிவான் இரண்டில் எது சரியெனத் தேடுகையில் அவருடைய பெயர் ஆங்கிலத்தில் ELAVENIL VALARIVAN என இருந்தது. வலரிவன், வளரிவன் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் 'வாலறிவன்' எனத் திருத்தினார்கள். தங்க மங்கை - இளவேனில் வாலறிவன். இச்சொல்  திருக்குறளில் கடவுள் வாழ்த்து குறள் (2) இல் இடம் பெற்றுள்ளது. 'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்'. பாலூர் கண்ணப்ப முதலியார் தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி வாலறிவன் என்பதற்கு கடவுள் என்பதாகப் பொருள் தருகிறது. வாலறிவன் என்பதற்கு மணக்குடவர் விளங்கிய அடிவினை உடையவன் எனப் பொருள் தருகிறார். இதையே  மெய்யறிவினை உடையான் ( பரிமேலழகர்);  மேல் அறிவாளனான சிவன...