ஓம்
தில்லி திகார் சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்தார் ஷபீர் என்கிற நபீர். இஸ்லாமியரான இவர் குற்றவழக்கு ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறையிலிருந்து வருகிறவர். ஒருநாள் சமையல் பணியின்போது , இன்டெக்சன் அடுப்பு வேலை செய்யவில்லையென்று, சிறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுகான் , கம்பியைப் பழுக்கக் காய்ச்சி, நபீரின் முதுகில் 'ஓம் ' என்கிற தேவநாகிரி இந்து மத அடையாள எழுத்தை ॐ எழுதியுள்ளார். இக்கொடுமையை தன்னைப் பார்க்க வந்த பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட, நீதிபதி நபீருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகானை உடனடி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஓம் என்பது எம்மொழிச்சொல், அதன் பொருள் என்ன? மின்துறையில் மின்தடையின் அலகாக ஓம் குறிக்கப்படுகிறது. இந்த விதியை வரையறுத்தவர் ஜார்ஜ் சைமன் ஓம் என்கிற ஜெர்மன் விஞ்ஞானி. ஓம் - பிரணவ மந்திரம் என்கிறது புராணக் கதை. இந்த மந்திரத்தை படைத்தல் தொழிற்கடவுள் பிரம்மன் மறந்துவிட்டதால் பிரம்மனை தமிழ்க்கடவுளான முருகன் சிறையில் ...