இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீசை

படம்
 மக்களவை முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ' பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய போர் விமானி அபிநந்தனைப் பெருமைப்படுத்த வேண்டும். அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் ' என வேண்டுகோள் வைத்தார். மீசை - எம்மொழிச் சொல்? குட்டநாடு பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீசை வளர்க்க ஆதிக்கச் சாதியினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி மீசை வளர்க்க முயலும் ஒருவரை மையமாக வைத்து மலையாள எழுத்தாளர் ஹரீஷ் 'மாத்ருபூமி' வார இதழில் ' மீசை'  என்றொரு தொடர் எழுதினார்.  இத்தொடர் இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக சங்பரிவார் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்க தொடர் நிறுத்தப்பட்டது. மீசை என்பது வெறும் மயிர் -  ஆதவன் தீட்சண்யாவின் நாவல். மயிர் - வசைச் சொல் (லியோ தமிழ் அகராதி) ; மயிராண்டி - வசைச் சொல் ( கி.ரா வட்டார வழக்குச் சொல் அகராதி) . மயிருடன் நீதிமன்றத்தை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் எச்.ராஜா. 'மயிர்நீப்பின் வாழா...

மீசை

படம்
 மக்களவை முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ' பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய போர் விமானி அபிநந்தனைப் பெருமைப்படுத்த வேண்டும். அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் ' என வேண்டுகோள் வைத்தார். மீசை - எம்மொழிச் சொல்? குட்டநாடு பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீசை வளர்க்க ஆதிக்கச் சாதியினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி மீசை வளர்க்க முயலும் ஒருவரை மையமாக வைத்து மலையாள எழுத்தாளர் ஹரீஷ் 'மாத்ருபூமி' வார இதழில் ' மீசை'  என்றொரு தொடர் எழுதினார்.  இத்தொடர் இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக சங்பரிவார் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்க தொடர் நிறுத்தப்பட்டது. மீசை என்பது வெறும் மயிர் -  ஆதவன் தீட்சண்யாவின் நாவல். மயிர் - வசைச் சொல் (லியோ தமிழ் அகராதி) ; மயிராண்டி - வசைச் சொல் ( கி.ரா வட்டார வழக்குச் சொல் அகராதி) . மயிருடன் நீதிமன்றத்தை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் எச்.ராஜா. 'மயிர்நீப்பின் வாழா...

தவசம்

படம்
ஜனவரி - 2019  காக்கை இதழில் தமிழர்  திருநாள் குறித்து இரு கட்டுரைகள். க.முகுந்தன் எழுதிய ஒரு கட்டுரை, 'பறவைகளால் உண்ணப்படும் நெல் மணிகளைச் சேகரித்த ஆதி மனிதன் அதனை உணவாக்க பல்தேடல் முயற்ச்சிக்குப்பிறகு  அரிசியை சுடுநீரிலிட்டு அரிசியைப் பதமாக்கிய அந்த தொடக்கக்கால சம்பவத்தைக் காண திரண்ட ஆதி மனிதர்களின் மகிழ்நிகழ்வே பொங்கல்' . பொங்கலைப் போற்றுதும் கட்டுரையில் சி.அறிவுறுவோன், 'பொங்குதல் என்பது குறிஞ்சி நிலத்தில் துவங்கி முல்லை, மருதம் நிலத்தைத் தொட்டது. புறநானூறு -168 பாடலின் படி சேரமான்கோதை என்பானுக்கு பிட்டங்கொற்றன் படை உதவி செய்திருக்கிறான். இவன் 'காட்டுப்பசுவிடம் கறந்த பாலில் உலை வைத்து , புதிய திணை அரிசியை அதில் இட்டு சந்தன மரத்து விறகில் தீ மூட்டிப் பொங்கலிட்டு வாழை இலையில் சேரமான் கோதைக்குப் பகிர்ந்தளித்தான் ' என்பதாக கருவூர்க் கதம்பிள்ளை சாத்தனார் பாடியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். 'அருவி ஆர்க்கும் கழைபயில் நனந்தலை' என்கிற பாடலில் காட்டுப் பன்றிகள் கிளறிய புழுதிப்பட்ட நிலத்தில்  விதைத்து , முற்றிய தவசத்தை நல்லநாள் பார்த்து அறுத்து சேமித்து பொங்குவர். த...

தலித்

படம்
ஏழு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி வீரேந்திர குமார் இடைக்கால மக்களவை சபாநாயகராக  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர். அது என்ன 'தலித்' ? இந்திய மக்கட்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் தலித் என்கிறது 2011 தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பு. தலித் மக்களை - மத்திய அரசு 'பட்டியல் இனத்தவர் ( Scheduled caste)  ' என்றும் தென் இந்திய மாநில அரசுகள் ஆதி தெலுங்கர், ஆதி கன்னடர், ஆதி திராவிடர் எனவும் பட்டியலிட்டுள்ளது. தமிழ்நாட்டில்  87  ஜாதிகள்(தமிழக அரசின் படி 76) தலித்கள்  என்கிறது ஒரு புள்ளி விவரம். தலித் என்பது மராட்டிய சொல். இச்சொல் dalita என்கிற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது. இச்சொல்லிற்கு divided, split, broken, scattered என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. dalita என்றால் பிராமணிய சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பொருள். தலித் - இச்சொல்லை அரசியல் ரீதியாக முதலில் பயன்படுத்தியவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மராட்டியத்தில் மகார், மாங்கு, சாமர்...

துவரி

படம்
புதிய பாடத்திட்டத்தின் படி உருவான பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடநூலின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்திலிருந்ததால்  சர்ச்சைக்கு உள்ளானது. அப்படத்தில் மாற்றமோ திருத்தமோ நிபுணர் குழுவே முடிவு செய்யும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார். காவி என்றொரு  நிறம் சங்க இலக்கியத்தில்  உண்டா, காவி என்பதற்கு தமிழ்ப்பெயர்தான் என்ன? காவி - Saffron. இச்சொல், Za'feran ( பாரசீகம் ) -  Safranum  ( இலத்தீன் ) - Safran ( பிரெஞ்சு) வழியில் ஆங்கிலத்தில் Saffron எனத் திரிந்திருக்கிறது. மஞ்சள் என்னும் பொருள் தரும் அஸ்பார் asfar  என்னும் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றது சேஃப்ரன் (Saffron) என்கிறது ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் எழுதிய  ‘The Book of General Ignorance’ என்கிற நூல். (தமிழில் - பொதுவான அறியாமைகள்  : த.க. பாலகிருட்டிணன்.) Saffron கிரேக்க இதிகாசத்தில் முக்கியமான நிறமாக இருந்திருக்கிறது. ஈயாஸ் என்கிற தெய்வத்தின் நிறம் மற்றும் ரோமில் அரோரா த...