இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனலி

படம்
2019, திசம்பர் 26 அன்று முழு வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தக் கிரகணம் சவுதி, அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, அமீரகம், சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர் என பல பகுதிகளில் காண முடிந்தாலும், திருச்சியில் அதிகபட்சமாக 95 சதவீதம் வரை சூரிய மறைப்பைக் காண முடிந்தது. சூரியன் என்பதைத் தனித்துச் சொல்கையில் SUN  என்றும் , சூரியனுடன் தொடர்புபடுத்திச் சொல்கையில் SOLAR  என்றும் சொல்லப்படுகிறது. உதாரணம், சூரியக் கிரகணம் ( SOLAR ECLIPSE),  சூரிய குடும்பம் ( SOLAR SYSTEM ). சன் - சோலார் இரண்டும் ஒன்றா? இதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன ? சுள் - சுர் - சூர் - சூரி. சுள் என்றால் நெருப்பு என்று பொருள். இதன் திரிபுதான் சூரி - சூரியன். சுள் என்பதற்கு எரித்தல் என்றொரு பொருள் உண்டு. தொல்காப்பியம், திருக்குறளில் சூரியன் என்கிற சொல் இடம்பெறவில்லை. ஆகவே சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல, என்பாரும் உண்டு.  ரிக் வேதத்தில் ஸூர்ய என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சூரியநாராயண சாஸ்த்திரி என்கிற தன்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் இயக்கம் சூரியனைப் பரிதி என...

ஓலக்கம்

படம்
மக்களின் பாடகர் ' மருதமலை மாமணியே முருகையா' மதுரை சோமு ( 1919 - 2019) நூற்றாண்டை முன்னிட்டு இசை விமர்சகர் எஸ்.சிவகுமார் தி இந்து நாளிதழில் ' சோமு நீ சமானம் எவரு ' என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். அறுபதுகளின் பிற்பகுதி சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு கோயில் கச்சேரி. அன்றெல்லாம் சபா கச்சேரிகளை விட கோயில் கச்சேரிகளே அதிகம். செலவில்லாமல் சங்கீதப் பிரவாகத்தில் விடாய் தீர்ந்த பொற்காலம். அன்று கோயிலில் மகாவித்வான் சோமுவின் தர்பார். தெருவெல்லாம் கூட்டம் அலைமோதியது... சரி, தர்பார் என்பது என்ன? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடித்திருக்கும் திரைபடம் 'தர்பார்'. பாரசீகம் ( ஈரான் ) நாட்டின் கெர்மான் மாகாணம் மன்னராட்சியின் தலைமையிடமாக இருந்தது. அந்த மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம் தர்பார் ( Darbar). இங்கு பாரசீகர்களின்  நீதி பரிபாலனம் நடந்தேறியிருக்கிறது. Durbar என்பது உருது சொல். இதற்கு நீதி என்று பொருள். இச்சொல்லிலிருந்து திரிந்தது Darbar. Darb + bar/ darb என்பதற்கு உருது மொழியில் இல்லம், அரண்மனை, மன்றம் என்றும் Bar என்றால் வாயில் ...

முற்றாள்

படம்
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தார். குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில்  நவம்பர் -25 அன்று அதிகாலை 5.17 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு காலை 8 மணிக்கு அவசரமாக தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக) முதலமைச்சராகவும், அஜித் பவார்    ( தேசியவாத காங்கிரஸ் ) துணை முதல்வராகவும் பதவி ஏற்றார்கள். இந்நிகழ்வு ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் - சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் வீதிக்கு வந்தன. THE TELEGRAPH என்கிற பத்திரிகை WE THE IDIOTS என தலைப்புச் செய்தியுடன் இந்திய ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என விமர்சனம் செய்தது.  மகாராஷ்டிரா மாநில பிரச்சனையைப் பொறுத்தவரைக்கும்  WE THE IDIOTS - நாம் முட்டாள்களே.  சரி, முட்டாள் என்பதன் வேர்ச்சொல் என்ன ? 2018 ஆம் ஆண்டின் இறுதியில் கூகுள் தேடு பொறியில்  IDIOT எனத் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பெயர் வர அவ்வாண்டின் அதிக நபரால் தேடப்பட்ட சொல்லானது. முட்டாள் ஒரு தமிழ்ச்சொல். சிலையை அல்லது இராணியைப் பல்லக...

அபரஞ்சி

படம்
கமல்ஹாசன் , சினிமாவில் 60 ஆவது ஆண்டை தொடுவதை முன்னிட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் வடிவேலு, 'பரமக்குடி தந்த பத்தரைமாத்துத் தங்கம் கமல்' எனப் பேசினார். மாற்று என்பதே மாத்து என்பதாக திரிந்துள்ளது. சரி, பத்தரை என்பது என்ன? ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி. குண்டலம் என்றால் சுருள் என்று பொருள். கேசி - முடி. இந்த காப்பிய நாயகியின் பெயர் பத்தரை. பத்தரை, பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு பெயர்.  இதன் பொருள், அனைத்தையும் உணர்ந்தவள் ( லியோ தமிழ் அகராதி). பத்தரை - பொன்னுடன் தொடர்புடைய ஒரு சொல். கணக்கதிகாரம் பொன்னை அளக்கும் அளவுகளை வெண்பாவாக பாடியுள்ளது. இதன்படி, 1பிளவு = 2 நெல் / 1 குன்றிமணி= 2 பிளவு / 1 மஞ்சாடி= 2 குன்றிமணி / 1 பணம்= 2 மஞ்சாடி /1 கழஞ்சு= 10 பணம்/ 1 கஃசு= 2 கழஞ்சு /1 வராகன்= 12 கழஞ்சு /1 ஓஞ்சை= 9 வராகன் /1 சேர்= 9 ஓஞ்சை /1 பவுன்= 12 ஓஞ்சை. ஒரு சவரன் பொன் என்பது தோராயமாக 8 கிராம். சரியாக 7.9881 கிராம். இதில் தூய பொன் என்பது 7.3 கிராம். பொன், கேரட் என்கிற அளவால் அளக்கப்படுகிறது. இந்த அளவை,...

முத்தவல்லி

படம்
பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி, மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.  சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நீதி மன்றத்தில் தொடங்கியது இந்த அயோத்தி வழக்கு. இவ்வழக்கின் தோற்றுவாய் ஹாசிம் அன்சாரி, ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ். இருவரும் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தும் தங்கள் நட்பைத்  தொடர்ந்தனர். இருவரும் சிறுவயது முதல் அயோத்தி நகர தெருவில் ஓடி, ஆடி விளையாடியவர்கள். டிசம்பர் 23, 1949 இல் நள்ளிரவில் பாபர் மசூதினினுள் ராமர் சிலை வைக்கப்பட்டபின் பைஸாபாத் நீதிமன்றத்தில் இருவரும் ஒன்றாக கிளம்பிச் சென்று வழக்குத் தொடுத்தனர். 2003 இல், பரமஹன்ஸ் மறைந்த போது, அவரது உடல் முன் மறுநாள் காரியம் நடைபெறும் வரை இரவிலும் கண்விழித்து அமர்ந்திருக்கிறார் ஹாசிம் அன்சாரி. இறுதி தீர்ப்பு வருகையில் இருவரும் உயிருடன் இல்லை.  ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதியின் கடைசி முத்தவல்லி என்கிறது -தி இந்து நாளிதழ். சரி,முத்தவல்லி என்பது என்ன?  முத்தவல்லி , வக்ஃப் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு  சொல். இந்தியாவில் வக்ஃப் செல்லுபடி...

ஐயன்

படம்
அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் பாய்வதாக கருதப்படும் சரஸ்வதி ஆகிய ஆறுகளின் சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேட தமிழர்கள் ஒன்று கூடுகின்றனர். எனவே, அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி யின் இந்தி அறிஞர்கள் விரும்பினர். இவர்கள் உ.பியில் மொழிகளை இணைக்க அமைந்த ' பாஷா சங்கம் ' எனும் சமூகசேவை அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைமையிடமான அலகாபாத் சங்கத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து அவரது சிலையையும் அமைக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து கடந்த ஜூலை 10 இல் தென்கரை சாலைக்கு ' தமிழ்கே சந்த் கவி  திருவள்ளுவர் மார்க் ( தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை ) என இந்தி, தமிழ் பெயரில் பெயர்ச்சூட்டப்பட்டது. அதே நேரம் திட்டமிட்ட இடத்தில் சிலையை நிறுவ அம்மாநில அரசு தடை விதித்தது. சரி, ஐயன் என்பது என்ன? தொடக்கத்தில் ஐயன் அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர்கள்  மூவர். அவர்கள், திருவள்ளுவர், ஐயனாரிதன் ( ஐயன் ஆரிதன் ), அயோத்திதாச பண்டிதர். தேவாரப்பாடல்கள் சிவன் ஐயன் என அழைக்கப்படுகிறான். அப்பன் என்பது பெருமாள். சிவன், திருமால் இருவருக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்கிறது புர...

கொந்தர்

படம்
மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்த 2 வயதுடைய சுஜித் , 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். நவீன தொழில்நுட்பமும், உரிய கருவிகளும் இல்லாததால்தான் இத்துயரம் நேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழக தகவல் தொழிற்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ்பாபு, ' ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்க நவீன கருவிகளைக் கண்டுபிடிக்க ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 இலட்சம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசுக்கு தகவல் தொழிற்நுட்பத் துறையின் மூலம் பரிந்துரை செய்துள்ளோம் என்றார். ஹேக்கத்தான் ( HACKATHON ) என்பது என்ன? ஹேக்கத்தான், பிரதமர் நரேந்திர மோடியின் 'ஸ்மார்ட் இண்டியா' என்கிற திட்டத்துடன் தொடர்புடைய ஒரு சொல். கடந்த செப்டம்பர் மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ), சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 சென்னை ஐஐடியில் நடத்தியது. Hackathon, இச்சொ...

படம்
'டிக்டாக் வீடியோக்கள் என்ன சொல்கின்றன? - இந்து தமிழ் - பெண் இன்று இதழில் பிருந்தா சீனிவாசன் எழுதிய ஒரு கட்டுரை. வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதிலிருந்து மீளத்தான் இப்படிப் பொதுவெளியில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் அவர். ஆனால் சேலம் அரசு மனநல மருத்துவர் அபிராமி, 'ஆணோ, பெண்ணோ டிக்டாக், முகநூல் வழியே தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதை ' நார்சிசம்' என்கிறார்.  அது என்ன நார்சிசம், இதற்கு நிகரான தமிழ்ச்சொல் தொன்மைத் தமிழில் உண்டா? கிரேக்க இதிகாச கதையில் நார்சிசஸ் என்றொரு கதாப்பாத்திரம். தன் முகத்தை ஒரு நாள் ஏரியில் பார்க்கிறான். அவன் முகம் அவனுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. ஒவ்வொரு நாளும் அவனது முகத்தைப் பார்த்து ரசிக்கிறான். ஒரு நாள் அவனது முகத்தின் மீது அதீத மோகம் வர ஏரியில் தெரியும் அவனது முகத்தைக் கட்டித் தழுவ நீரோடையில்  குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறான்.  Tiktok என்கிற வீடியோ naarcissim personality disorder என்கிற நோயியத்தை ஏற்படுத்துவதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். Tiktok...

மோடி

படம்
பாரதியாரின் முப்பெரும் பாடல்களாவன கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு. மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். ஆனால் பாரதி, தன்னைத் தலைவனாகவும் கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி பாடிய பாடல் இது. கண்ணன் - என் காதலன் பகுதியில், "ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன் மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல மொந்தைப் பழையகள்ளைப் போலே'' என்பதாக ஒரு வரி. இப்பாடலில் மோடி என்பதன் பொருள் என்ன ? தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்துப் பிள்ளை சிவபெருமான் குறித்து பாடியுள்ள ஒரு பாடலில்,  பிட்டுக்கு மண் சுமந்தது, பிள்ளைக் கறி கேட்டது, சாதி இல்லாதவன், தாயும், தந்தையும் இல்லாதவன், குறவர் வீட்டுப் பெண்ணை மகனுக்கு மணம் முடித்தவன்,...என்பதாகப் பாடிச் செல்லும்  ஒரு பாடலில் ' மறை ஓதிவணங்கு ...

எவன்கொலோ

படம்
ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது விவாதத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டால் அது உலக நாடுகளைப் பாதிக்கும்,... என்றார். அவரது உரையை இந்திய பத்திரிகைகள்  ' hate speech' என எழுதின. அவரது உரைக்குப் பதிலளித்த  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் விதிஷா மைத்ரா, ' Words matter in diplomacy (ராஜரீக உறவுகளில் வார்த்தைகள் முக்கியமானவை); Pogrom ( இனப்படுகொலை), bloodbath( இரத்தக்களரி), racial superiority ( இனவாதம்), pick up the gun( துப்பாக்கியைத் தூக்கு), fight to the end ( கடைசி வரை சண்டையிடு) என இம்ரான்கான் பயன்படுத்திய வார்த்தைகள் இடைக்காலத்தைப் பிரதிபலிப்பவை தவிர, 21 ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை அல்ல' என்றவர் ஐ.நா பெருமன்றம் வன்சொற்களை விடவும் இன்சொற்களையே பெரிதும் விரும்புவதாக ஆங்கிலத்தில் உரையாற்றினார். 21 ஆம் நூற்றாண்டின் வன்சொற்களென இரு சொற்களை உலக நாடுகள் அறிவித்துள்ளன...

பகம்

படம்
ஆந்திர மாநிலம், சித்தூர் ( தனித்தொகுதி) மக்களவைத் தொகுதியிலிருந்து கடந்த 2009 ஆண்டு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத், ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013 -14 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதையெடுத்து ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவபெருமான், அம்பேத்கர், நாரதர், கலைஞர், எம்.ஜி.ஆர், அகத்தியர்,  ஹிட்லர், நாதஸ்வர வாசிப்பாளர்,..என தினமும் விதவிதமான கதாபாத்திர வடிவில் ஆடை அலங்காரம் செய்து விநோதமாக போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். செப்-21, 2019 அன்று அவர் மறைந்ததையடுத்து பதினெட்டு கதாபாத்திரங்கள் கொண்ட கோப்புப் படத்துடன் கூடிய இரங்கல் செய்தியை இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'நவராத்திரி' என்கிற திரைப்படத்தில், அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் நடித்துள்ளார். நவம் என்றால் ஒன...

குழாம்

படம்
எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம் - இந்து தமிழ் திசை இதழில் செல்வேந்திரன் எழுதிய ஒரு  கட்டுரை. திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்சோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் யோஜனா, ஸ்மார்ட் சிட்டி , பொருளாதார நெருக்கடி,..என எந்தவொரு கேள்விக்கும் கல்லூரி மாணவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சினிமா பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறார்கள்,...இன்றைய கல்லூரி மாணவர்கள் குறித்து கவலைப்படும் கட்டுரையாளர் மொக்கை என்கிற சொல்லுக்கு கூர்மையற்ற, மொக்கு, மொண்ணை என்பதாகப் பொருள் தந்திருந்தார்.  குழாம் என்பது என்ன? இலங்கை தமிழர்களிடம் இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. '20 -20 மட்டைப்பந்து போட்டிக்கு இலங்கை குழாம் அறிவிப்பு -  வீரகேசரி'. இங்கு குழாம் என்பது அணி. விண்மீன் குழாம் ( விண்மீன் கூட்டம் ) சென்னையில் இயங்கிவரும் ஓர் இலக்கிய அமைப்பு ' சென்னை மரபுக்கூடல்'. இந்த அமைப்பு மரபு இல்லம், ஆற்றுப்படை, செம்மை நல அரங்கு, செம்மை நூலகம், நூல் விற்பனை, பொது அ...

ஈறு

படம்
Assam NRC | No last word yet on National Register of Citizens: Himanta Biswa Sarma. ( THE HINDU).அஸ்ஸாம் மாநிலத்தில் வசிப்பவர்களில் உண்மையான குடிமகன் யார், வெளிநாட்டினர் யார் என்கிற கணக்கெடுப்பு உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் நடந்தேறியது. மொத்தமுள்ள 3 கோடி பேரில் 19 இலட்சம் பேர் வெளிநாட்டினர் என்கிற பட்டியல் வெளியானது. இப்பட்டியலிருந்தவர்களில் பலர் தாங்கள் அஸ்ஸாமியினரே எனக் கதறவும் எங்களை உண்மையான இந்திய அஸ்ஸாமி பட்டியலில் சேர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்கள். இந்நிலையில் அம்மாநில அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா (பாஜக), 'மோடி மற்றும் அமித்ஸா இருவரும் இந்துக்களை கைவிடமாட்டார்கள். கவலை கொள்ள வேண்டாம். இப்பட்டியல் ஒன்றும் கடைசிச் சொல் அல்ல' என்றார். இறப்பதற்கு முன் சொல்வதும், ஒரு சம்பவம் முடிவுறும் பொருட்டு மொழிதலும் கடைசிச் சொல் என அழைக்கலாகின்றன. காந்திஜி உச்சரித்த கடைசிச் சொல் - ஹேராம். ஜூலியஸ் சீசர் - புரூட்டஸ்? ; காமராசர் - விளக்கை 'அணை'. திருக்குறளின் கடைசிச் சொல் - பெறின். லிப்கோ ஆங்கில அகராதி - Zymurgy/ஆக்ஸ்போர்டு அகராதி - Zucchini/லியோ தமிழ் அகராத...

வாலறிவன்

படம்
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இதை வென்றவர் தமிழ்நாட்டு வீராங்கனை என்பதால், 'இளவேனில் வளரிவான் அசத்தல்', 'இளவேனில் வலரிவான் தங்கம் வென்றார்' என்கிற செய்தி தொலைக்காட்சியில் வரிச்செய்தியாகவும், முதன்மைச் செய்தியாகவும் இடம் பெற்றது. வளரிவான், வலரிவான் இரண்டில் எது சரியெனத் தேடுகையில் அவருடைய பெயர் ஆங்கிலத்தில் ELAVENIL VALARIVAN என இருந்தது. வலரிவன், வளரிவன் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் 'வாலறிவன்' எனத் திருத்தினார்கள். தங்க மங்கை - இளவேனில் வாலறிவன். இச்சொல்  திருக்குறளில் கடவுள் வாழ்த்து குறள் (2) இல் இடம் பெற்றுள்ளது. 'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்'. பாலூர் கண்ணப்ப முதலியார் தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி வாலறிவன் என்பதற்கு கடவுள் என்பதாகப் பொருள் தருகிறது. வாலறிவன் என்பதற்கு மணக்குடவர் விளங்கிய அடிவினை உடையவன் எனப் பொருள் தருகிறார். இதையே  மெய்யறிவினை உடையான் ( பரிமேலழகர்);  மேல் அறிவாளனான சிவன...

தாம்பு

படம்
மும்பை ஐ.ஐ.டி  பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,' உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம்தான்' என்றார். இவ்வுரைக்கு புலவர் பா.வீரமணி வண்ணக்கதிரில் 'பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால்படி'  என்கிற தலைப்பில் மறுப்புக் கட்டுரை எழுதினார். இராஜாராம் மோகன்ராய் உருது, அரபு, பாரசீகம், ஆங்கிலம் தெரிந்த பன்மொழி அறிஞர். பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருத்தவம், வேதம், உபநிடதங்கள் அறிந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியினர் சமஸ்கிருதம் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்டமிட்டபோது கவர்னர் ஜெனரல் ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு 11.12.1823 அன்று நீண்ட கடிதம் எழுதினார். 'சமஸ்கிருதம் இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடைக்கச் செய்கிறது. இதுவே பிரிட்டிஷ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்குமானால் சமஸ்கிருதக் கல்வி முறை போதுமானதாகும்'. (ஆதாரம் -  இராஜாராம் மோகன்ராய் - சௌமியேந்திரநாத் தாகூர் - 1972 - சாகித்திய அகாதமி ). ' வடமொழி நம்மை தூக்கிடும் தாம்பு - நம் உரிமைதனைக் கடித்தது அப்பாம்பு ' எ...

ஒள்ளி

படம்
சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் 1796 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் மரங்களலான கோபுரமாக அமைக்கப்பட்டு பிறகு அது கேப்டன் ஸ்மித் என்பவரால் எஸ்பிளனேடு ( பாரிமுனை) பகுதியில் கட்டுமானமாக நிறுத்தப்பட்டது.   இதேபோன்று 1892 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மற்றொரு விளக்கம் இன்று சென்னை உயர்நீதி மன்றம் வளாகத்திற்குள் அமையப்பெற்றுள்ளது. இந்த இரண்டாவது கலங்கரை விளக்கம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை,  சென்னை தினம் உருவான நாளான  ஆகஸ்ட் 22, 2019 அன்று வெளியிடப்பட்டது.  கலங்கரை விளக்கம் - இதன் சங்கப் பெயர் என்ன? இன்று Lighthouse என அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் முன்பு BEACON என அழைக்கப்பட்டது. கிமு 280 இல் எகிப்து அலெக்ஸாண்டிரியா கடற்கரையில் அமைக்கப்பட்ட BEACON LIGHT உலகின் முதல் கலங்கரை விளக்கம் என்கிறது வரலாறு. இதற்கு நாதீ, குன்றின் மேலிட்ட விளக்கு, வழிக்காட்டொளி, தீப்பந்தம், குறிவிளக்கு எனப் பல பொருளுண்டு. இதற்கு முன்பே தமிழகத்தில் கலங்கரை விளக்கம் இருந்ததாக சங்கப் பாடல்கள் உண்டு. சங்க காலத்தில் தெற்கிலிருந்து வடக்காக அமையப்பெற்ற த...