துவாய்
தளம் ஆகஸ்ட் இதழில் தவிப்பு என்றொரு சிறுகதை இலங்கை எழுத்தாளர் ச. இராகவன் எழுதியது.
மலர்விழி குழந்தையாக இருக்கையில் சிங்கள ஆர்மிக்காரர்கள் தந்தையைக் கொன்று விடுகிறார்கள். தாய், தம்பியுடன் வாழும் மலர்விழி தாயின் ஆசைப்படி மேற்படிப்பு பயிலாமல் இயக்கத்தில் சேர்கிறாள். இயக்கத்திலிருந்த மாறனை கயல்விழி காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். மலர்விழி ஒரு குழந்தைக்கு தாயாகையில் இறுதி கட்டப் போர் மூழ்கிறது. அவளுக்கு இயக்கத்திடமிருந்து அழைப்பு வருகிறது. அவளுக்கு பதில் அவளுடைய கணவன் போருக்குச் செல்கிறான். அவள் வசிக்கும் பகுதி ஆர்மி வசம் வர அவள் குழந்தை, தாயுடன் இடம் பெயர்கிறாள். அவள் கண் முன்னாலேயே தாயின் தலை துண்டிக்கப்படுகிறது. நிலை குலையும் மலர்விழி குழந்தையைத் துவாயால் போர்த்திக்கொண்டு பாதுகாப்புத் தேடி அலைகிறாள். விடுதலைப்புலி இயக்கத்தில் ஒரு நாளேனும் இயங்கியவர்கள் சோதனை சாவடியில் பெயர் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு சிங்கள இராணுவம் அறிவிக்கிறது. அவள் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு பெயரைப் பதிவு செய்கிறாள். அதற்கு பிறகு அவள் அதிலிருந்து வெளியேற முடியவில்லை.
ஈழத் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதையில் 'துவாய்' என்கிற சொல் வாசிக்கப் புதிதாக இருந்தது. புலம்பெயர் எழுத்தாளர் தாமரைச்செல்வி 'யாரோடு நோவோம்? ' என்கிற சிறுகதையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
'துவாயால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்'. அகரமுதல்வன் எழுதிய கோமா சக்தி என்கிற சிறுகதையில் ' ரோஸ் நிற துவாயில் ' என்பதாக ஓரிடம் வருகிறது. ஜீவகுமாரன், நவீன் போன்றவர்களின் கதைகளில் இச்சொல்லை நிறைய இடங்களில் காணமுடிகிறது.
தமிழ் இலக்கணத்தில் , சீர் மோனை வகைகளில் கீழ்க்கதுவாய் , மேற்கதுவாய் என இரு வகைகள் இருக்கின்றன. வியட்நாம் நாட்டில் பின்ஹ் துவாய் என்றொரு மாகாணம் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு நுகே கோட நகரில் 'துவாய் மட்டும் அணிந்து பேருந்தில் ஏறிய வாலிபன்' என்கிற செய்தி பரபரப்பிற்கு உள்ளானது. அது என்னதாம் துவாய்?
துண்டு , டவல் இரு சொற்களின் சேர்க்கை துவால் - துவாய் என மறுவி வந்திருப்பதாக மயூர்நாதன் ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும் அவர், கொழும்பில் வாழும் தமிழர்கள் பகுதியில் துண்டு என்றால் பெண்களை கேலி செய்யும் சொல்லாக இருக்கிறது. ஆகவே அவர்கள் முகம் துடைக்கும் துண்டை துவாய் எனப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார். துண்டு , துவாய் இரண்டும் ஒன்றுதான் என்றாலும் இவ்விரு சொற்களையும் பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க அவர்கள் தேடுவது துவாயைத் தான்.
இதிலிருந்து நாமொரு முடிவுக்கு வர முடியும், துவாய் என்பது பெரிய துண்டு எனலாமே!
மலர்விழி குழந்தையாக இருக்கையில் சிங்கள ஆர்மிக்காரர்கள் தந்தையைக் கொன்று விடுகிறார்கள். தாய், தம்பியுடன் வாழும் மலர்விழி தாயின் ஆசைப்படி மேற்படிப்பு பயிலாமல் இயக்கத்தில் சேர்கிறாள். இயக்கத்திலிருந்த மாறனை கயல்விழி காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். மலர்விழி ஒரு குழந்தைக்கு தாயாகையில் இறுதி கட்டப் போர் மூழ்கிறது. அவளுக்கு இயக்கத்திடமிருந்து அழைப்பு வருகிறது. அவளுக்கு பதில் அவளுடைய கணவன் போருக்குச் செல்கிறான். அவள் வசிக்கும் பகுதி ஆர்மி வசம் வர அவள் குழந்தை, தாயுடன் இடம் பெயர்கிறாள். அவள் கண் முன்னாலேயே தாயின் தலை துண்டிக்கப்படுகிறது. நிலை குலையும் மலர்விழி குழந்தையைத் துவாயால் போர்த்திக்கொண்டு பாதுகாப்புத் தேடி அலைகிறாள். விடுதலைப்புலி இயக்கத்தில் ஒரு நாளேனும் இயங்கியவர்கள் சோதனை சாவடியில் பெயர் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு சிங்கள இராணுவம் அறிவிக்கிறது. அவள் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு பெயரைப் பதிவு செய்கிறாள். அதற்கு பிறகு அவள் அதிலிருந்து வெளியேற முடியவில்லை.
ஈழத் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதையில் 'துவாய்' என்கிற சொல் வாசிக்கப் புதிதாக இருந்தது. புலம்பெயர் எழுத்தாளர் தாமரைச்செல்வி 'யாரோடு நோவோம்? ' என்கிற சிறுகதையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
'துவாயால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்'. அகரமுதல்வன் எழுதிய கோமா சக்தி என்கிற சிறுகதையில் ' ரோஸ் நிற துவாயில் ' என்பதாக ஓரிடம் வருகிறது. ஜீவகுமாரன், நவீன் போன்றவர்களின் கதைகளில் இச்சொல்லை நிறைய இடங்களில் காணமுடிகிறது.
தமிழ் இலக்கணத்தில் , சீர் மோனை வகைகளில் கீழ்க்கதுவாய் , மேற்கதுவாய் என இரு வகைகள் இருக்கின்றன. வியட்நாம் நாட்டில் பின்ஹ் துவாய் என்றொரு மாகாணம் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு நுகே கோட நகரில் 'துவாய் மட்டும் அணிந்து பேருந்தில் ஏறிய வாலிபன்' என்கிற செய்தி பரபரப்பிற்கு உள்ளானது. அது என்னதாம் துவாய்?
துண்டு , டவல் இரு சொற்களின் சேர்க்கை துவால் - துவாய் என மறுவி வந்திருப்பதாக மயூர்நாதன் ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும் அவர், கொழும்பில் வாழும் தமிழர்கள் பகுதியில் துண்டு என்றால் பெண்களை கேலி செய்யும் சொல்லாக இருக்கிறது. ஆகவே அவர்கள் முகம் துடைக்கும் துண்டை துவாய் எனப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார். துண்டு , துவாய் இரண்டும் ஒன்றுதான் என்றாலும் இவ்விரு சொற்களையும் பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க அவர்கள் தேடுவது துவாயைத் தான்.
இதிலிருந்து நாமொரு முடிவுக்கு வர முடியும், துவாய் என்பது பெரிய துண்டு எனலாமே!
கருத்துகள்
கருத்துரையிடுக